சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் செய்வதறியாது திகைத்துப் போகினர்.
அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை , கே கே நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள், சென்னை ஆவடி, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல் பணிமனை என பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தினர்.
மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோர் என மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, ஜப்பானில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்குவதாக தொழிற்சங்கத்தினரிடம் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார். இதனையடுத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்துகளை இயக்க தொடங்கினர். இதனால், சென்னையில் மாநகர அரசு பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத்தொடங்கின.
அரசுப் பேருந்து ஊழியாகளின் இந்த திடீர் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆட்டோக்கள், டாக்சிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்தது. ஆட்டோக்களில் வழக்கத்தைவிட ரூ.75 வரை கூடுதலாகவும், சென்ட்ரல் – பல்லாவரம் டாக்ஸி கட்டணம் ரூ.550 வரை உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, விதிகளுக்குட்பட்டு பயணிகளிடம் கட்டணங்களை வசூலிக்குமாறு ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.