ஜெட் வேகத்தில் சென்னை மாவட்டம் : 100க்கு கீழ் கோவை.. இன்றைய தமிழக கொரோனா நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2021, 7:46 pm
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900த்திற்கு கு கீழ் குறைந்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 850 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,09, 080ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, சென்னையில் 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கோவையில் 96 பேருக்கும், செங்கல்பட்டுவில் 76 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும், திருப்பூரில் 62 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,220 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 958 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 62 ஆயிரத்து 386 பேராக அதிகரித்துள்ளது.
0
0