சென்னை : குடும்ப பிரச்சனையில் தங்கை மற்றும் மச்சானை கத்தியால் வெட்டிய சம்பவம் திருவெற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை திருவொற்றியூர் குமரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் மற்றும் அனிதா தம்பதியினர். இதில் அனிதாவின் அண்ணன் அருண்குமார் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அருண்குமாரின் ஆட்டோ தங்கராஜ் வீட்டின் அருகே நிறுத்தி வைத்ததிருந்தார்.
இன்று ஆட்டோவை எடுப்பதற்காக அருண்குமார் வந்துள்ளார். அப்பொழுது அருண்குமார் தங்கராஜூக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அருண்குமார் தன்னிடம் இருந்த பேனா கத்தியால் தனது தங்கை என்றும் பார்க்காமல் அனிதா மற்றும் அவரது கணவர் தங்கராஜை வெட்டியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தங்கை மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டிய சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.