சென்னை : குடும்ப பிரச்சனையில் தங்கை மற்றும் மச்சானை கத்தியால் வெட்டிய சம்பவம் திருவெற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை திருவொற்றியூர் குமரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் மற்றும் அனிதா தம்பதியினர். இதில் அனிதாவின் அண்ணன் அருண்குமார் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அருண்குமாரின் ஆட்டோ தங்கராஜ் வீட்டின் அருகே நிறுத்தி வைத்ததிருந்தார்.
இன்று ஆட்டோவை எடுப்பதற்காக அருண்குமார் வந்துள்ளார். அப்பொழுது அருண்குமார் தங்கராஜூக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அருண்குமார் தன்னிடம் இருந்த பேனா கத்தியால் தனது தங்கை என்றும் பார்க்காமல் அனிதா மற்றும் அவரது கணவர் தங்கராஜை வெட்டியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தங்கை மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டிய சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.