கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 120 கோடி மதிப்பிலான பல்வேறு ரோடு பணிகளுக்கான ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
முன்னதாக, தகுதியான ஒப்பந்ததாரர்களா என்பதை அறியும் விதமாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் உள்ள இயந்திரங்கள் மற்றும் பிளான்ட்டுகளை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு பிரிவினர் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பது விதியாகும். அச்சான்றிதழை ஒப்பந்தப்புள்ளியுடன் இணைத்து, பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கியமான நிபந்தனையாகும்.
ஆனால், கோவையில் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் மட்டும், டெண்டர் கோருவதற்கு சலுகை அளிக்கும் வகையில், மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு அச்சான்றிதழ் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘ஏற்கனவே டெண்டர் எடுத்து, பணியை முழுமையாக முடிக்காத நிறுவனங்களுக்கு, மீண்டும் டெண்டர் கொடுக்கக்கூடாது என்றும, சில நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் மதிப்புக்கு டெண்டர் எடுத்து, இன்னும் செய்து முடிக்காமல், தாமதித்து வரும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கே மாநில நெடுஞ்சாலைத்துறையில் மீண்டும் டெண்டர் தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்ற தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் பெற முடியாத அளவுக்கு, தகுதி சான்றிதழ் வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.