சென்னை : நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற்று வரக்கூடிய காரணத்தினால், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயநீதிமன்ற வளாகத்தின் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
அப்போது, கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னை உயநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. டாஸ்மாக், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயக்கும் போது, நீதிமன்றங்களில் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி மறுப்பது ஏன்…? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மறுக்கப்பட்டதாலும், 2020 முதல் 2022 வரை நீதிமன்றங்கள் மூடியதாலும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பாதிக்கபட்ட வழக்கறினர்களுக்கு தமிழக அரசும், பார் கவுன்சிலும் 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.