சென்னை : செங்குன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ மைத்துனரே காரணம் என்கிற ஆத்திரத்தில் அவரை அரிவாள்மனையில் வெட்டி கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிண்டி மடுவான்கரை முதல்தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (36). இவர் வெல்டராக தொழில் புரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து செங்குன்றம் நாரவாரிகுப்பம் வைத்தீஸ்வரன் தெருவில் உள்ள மைத்துனரான நாகராஜ் (25) என்பவரின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் மதுபோதையில் இருந்தபோது, ‘எனது மனைவி பிரிந்து வாழ நீதான் காரணம்’, என கூறி தகராறில் ஈடுபட்டதில், ஆத்திரமடைந்த செல்வக்குமார் வீட்டிலுள்ள அரிவாள்மனையால் தீடீரென மைத்துனர் நாகராஜை கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், செங்குன்றம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து நடந்தவற்றை போலீசாரிடம் கூறினார். உடனடியாக போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த நாகராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.