சென்னையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், கத்தியுடன் காவலரை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த திருமாவளவன், நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேர் சாலையில் அவரை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் உடனடியாக வந்தார்.
அங்கு பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது, போலீஸ்காரர் என்று கூட பார்க்காமல், கஞ்சா போதையில் இருந்த நபர், சிறிய கத்தியால் தன்னைக் கிழித்துக் கொண்டதோடு, காவலரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் துரத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் சரவணன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி போலீசார், கஞ்சா போதையில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில் காவலரை கஞ்சா போதை ஆசாமிகள் மிரட்டிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.