அடுக்குமாடி குடியிருப்புகளில் விலை உயர்ந்த செருப்புகளை திருடி குறைந்த விலைக்கு விற்ற திருடனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரவள்ளூர் பெரியார் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரபாபு (61). இவர் நேற்று காலை 10 மணி அளவில் இவர் தனது வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்த போது, அதில் அடையாளம் தெரியாத நபர் இவரது அடுக்குமாடி காம்பவுண்டுக்குள் உள்ளே நுழைந்து வீட்டின் வெளியே இருக்கும் காலணிகளை திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த பெரவள்ளூர் போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்த ராஜா (35), இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்ததும், எப்பொழுதெல்லாம் வேலை இல்லையோ, அப்போதெல்லாம் பல்வேறு இடங்களில் சென்று விலை உயர்ந்த செருப்புகளை திருடி அதனை பாரிமுனையில் குறைந்த விலைக்கு விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.