தமிழகம்

நான் வீழ்வேனா..வீல் சேரில் சென்றாவது விளையாடுவேன்..மனம் திறந்த எம்.எஸ்.தோனி.!

தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.ஆனால் 43 வயதான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஐபில் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதையும் படியுங்க: வா முடிஞ்சா மோதி பாரு..CSK-வை வாழ்த்திய கமலின் ‘தக் லைஃப்’ படக்குழு.!

2023 வரை கேப்டனாக இருந்த தோனி கடந்த ஆண்டு முதல் விக்கெட் கீப்பர் மற்றும் முக்கிய பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் செயல்படுகிறார்.

கடந்த 2024 ஐபிஎல் சீசனே தோனியின் கடைசி சீசன் என பலரும் கருதினார்கள்.ஆனால்,ரசிகர்களின் அன்பும்,ஆதரவும் காரணமாக இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி அறிவித்தார்.

இதையடுத்து,சென்னை அணியின் நிர்வாகம்,2025 ஐபில் சீசனுக்கு முன்னதாக,அவரை 4 கோடி ரூபாய்க்கு அன் கேப்டு வீரராக தக்க வைத்தது.

2025 ஐபில் சீசனின் முதல் லீக் போட்டியில், ன்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன.

இந்நிலையில் Jio Hotstar ஏற்பாடு செய்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டார்.அங்கு தன் ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த அவர் “நான் சிஎஸ்கே அணிக்காக எவ்வளவு ஆண்டுகள் விளையாட விரும்புகிறேனோ,அவ்வளவு தூரம் விளையாடுவேன்,அது என்னுடைய அணி,நான் வீல் சேரில் இருந்தாலும் கூட என்னை அழைத்து சென்று விளையாட வைப்பார்கள்” என்று சிரித்தபடி கூறினார்.

தோனியின் இந்த நகைச்சுவையான பதில் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.