திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் வந்துள்ளார் .
தொடர்ந்து அப்சர்வேட்டரி பகுதியில் விறகு எடுக்கச் செல்லும் பெண்கள் உடலில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் இருக்கிறார் என கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .
தொடர்ந்து ஜெகதீஸ்வர் உடலில் தீ காயங்களுடன் உடலில் துணிகள் இன்றி இருந்துள்ளார் . தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் ஜெகதீஸ்வர் தற்கொலைக்கு தானாக முயன்றாரா இல்லை யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
மேலும் அவருக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.