திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் வந்துள்ளார் .
தொடர்ந்து அப்சர்வேட்டரி பகுதியில் விறகு எடுக்கச் செல்லும் பெண்கள் உடலில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் இருக்கிறார் என கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .
தொடர்ந்து ஜெகதீஸ்வர் உடலில் தீ காயங்களுடன் உடலில் துணிகள் இன்றி இருந்துள்ளார் . தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் ஜெகதீஸ்வர் தற்கொலைக்கு தானாக முயன்றாரா இல்லை யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
மேலும் அவருக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.