சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது வி.ஆர் மால். சென்னையில் உள்ள பிரபல மால்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே, அனுமதியில்லாமல் மியூசிக் பார்ட்டி, பார்கள் உள்ளிட்டவை நடத்தியதாக இந்த மால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
வி.ஆர். மாலில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவத்தை 23 வயதான பெண் ஒருவர் சமூகவலைபக்கத்தில் பகிர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சமூகவலைதள பக்கத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்ட ஆண் நண்பர் ஒருவர், வி.ஆர். மாலில் படம் பார்க்க அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, அங்கிருக்கும் குறைந்த கண்காணிப்புகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத சில பகுதிகளில் அழைத்துச் சென்று தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், வி.ஆர். மாலில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.