சென்னை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரில் இயங்கி வரக்கூடிய மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருபவர் ராஜா (42). அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக (24) பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இளம்பெண் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, ராஜா திடீரென இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு, பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்த இளம்பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்துறையிடம் இரண்டு நாட்கள் கழித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அயனாவரத்தை சேர்ந்த மேனேஜர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.