சென்னை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரில் இயங்கி வரக்கூடிய மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருபவர் ராஜா (42). அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக (24) பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இளம்பெண் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, ராஜா திடீரென இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு, பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்த இளம்பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்துறையிடம் இரண்டு நாட்கள் கழித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அயனாவரத்தை சேர்ந்த மேனேஜர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.