ஈரோடு அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகர் – அமுதா தம்பதி. இவர்களது மகள் நீலாம்பரி. இந்த நிலையில், திடீரென இவர்கள் 3 பேரும், நேற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காரணம் கேட்டதற்கு, கடுமையான வயிற்று வலி எனக் கூறி உள்ளனர். பின்னர், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு, கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஹோட்டலில் ‘சிக்கன் ரைஸ்’ வாங்கி, 3 பேரும் பகிர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.
பின்னர், மறுநாள் முதல் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாகவும், 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்பதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறி உள்ளனர்.
மேலும், இது குறித்து மருத்துவர்கள் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருங்கல்பாளையத்துக்குச் சென்று, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை நடத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: தனது பெண் ஊழியரை பாலியல் இச்சைக்கு அழைத்த நாதக நிர்வாகி.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்!
அப்போது, அங்கு உணவக சமையல் அறை சுகாதாரம் அற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த ஹோட்டல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாமல் இயங்கியதும், இறைச்சி மற்றும் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, கழிவு எண்ணெய் தொடர்பான நடைமுறைகள், உணவு கையாள்வதற்கான மருத்துவ தகுதிச் சான்று என்ற எந்த முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.