தமிழகம்

ரயிலில் ஆர்டர் போட்ட சிக்கன் ரைஸ்.. கோவை இளம் வீராங்கனை பலி!

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: கோவையைச் சேர்ந்தவர் எலினா லாரேட். 15 வயதான இவர், கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்து உள்ளார்.

பின்னர், அங்கு இருந்து ரயில் மூலம் குவாலியர் சென்றார். தொடர்ந்து, அங்கு போட்டியில் பங்கேற்றுவிட்டு, ரயில் மூலம் மீண்டும் கடந்த நவம்பர் 15ஆம் தேதி சென்னை திரும்பி உள்ளார். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற எலினா, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக மிகவும் சோர்வுடன் கூறியுள்ளார்.

எனவே, உடனடியாக எலினாவை பெரியமேடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று உள்ளானர். ஆனால், எலினா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது, ரயில் பயணத்திற்குப் பிறகே இவ்வாறு எலினா உயிரிழந்து இருப்பதால், ரயிலில் அவருடன் பயணித்த சக மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. அப்போது ரயிலில் வரும்போது சிக்கன் ரைஸ், பர்கர் மற்றும் பீட்சா ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து மாணவிகள் அனைவரும் சாப்பிட்டது தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு!

எனவே, சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால், அதனால் ஏற்பட்ட உடற்கோளாறால் மாணவி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது தனியார் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்தால், நமது கோச் அருகே குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.