கிராமங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
திருவெண்ணைநல்லூர் காந்தி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நிழல் கூட்டத்தையும் அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூரில் இருந்து சித்தலிங்க மடம், திருவெண்ணெய்நல்லூர் வழியாக சென்னைக்கு புதிய பேருந்தையும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
மேலும் திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூர் வழியாக அருமலை ஊராட்சி வரை புதியதாக நகரப் பேருந்து இயக்கப்பட்டது. அதனையும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இன்றைக்கு தமிழகத்தில் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பெருமிதம் கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நடைபெற்ற தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகழேந்தி எம்எல்ஏ மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கம், மாவட்ட கவுன்சிலர் பிரபு உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.