Categories: தமிழகம்

மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும், உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 தமிழக மீனவர்கள் சமீபத்தில் தான் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவ்ர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.கைதுசெய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும், இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 7-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் 21 பேரையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மீனவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

KavinKumar

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

21 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

22 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

23 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

23 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

24 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.