Categories: தமிழகம்

சீனாவா? திருச்செந்தூரா? அரசு பேருந்து வழித்தட பலகையில் சீன மொழி… பயணிகள் குழப்பம்!!

சீனாவா? திருச்செந்தூரா? அரசு பேருந்து வழித்தட பலகையில் சீன மொழி… பயணிகள் குழப்பம்!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருச்செந்தூருக்கு தற்காலிக ஓட்டுனரை கொண்டு இயக்கப்பட்ட அரசு பேருந்தி்ல் சீன மொழி போன்று பெயர்பலகை இருந்ததால் குழப்பமடைந்த பயணிகள்

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாட்களாக பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை பொருத்தம்பட்டில் நேற்றைய தினம் 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இன்றைய தினம் 95 சதவீத அரசு பேருந்துகள் மாற்று ஓட்டுனர்களை வைத்து இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகம், அண்ணா பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் உட்பட மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் திருச்செந்தூர் செல்லக்கூடிய பேருந்து ஒன்றில் மாற்று பணியாளர்கள் வைத்து இயக்கப்பட்டு இருந்தது அதில் பேருந்தின் பெயர் பலகையில் சீன மொழி போன்ற அறிவிப்பு பலகை இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

மேலும் சீன மொழி போன்ற விளம்பர பலகையோடு மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.