தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தொழிற்சங்கத்தின் தியாகத்தை கொச்சைப்படுத் நினைத்த ஆர்.என்.ரவியின் நாக்கை அறுக்க கூடிய போராட்டத்தை நடத்துவோம் என்று சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் எச்சரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெண்மணி தியாகிகள் நினைவகத்தை கொச்சைப்படுத்தியதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு விழாவிற்கு சென்றால் மரியாதையாக அரசு விழாவுக்கு சென்று விட்டு வர வேண்டும் என்று கூறினார்.
சம்பந்தம் இல்லாமல் வெண்மணிக்கு சென்று வெண்மணி தியாகிகளின் நினைவிடத்தை கொச்சைப்படுத்தி பேசி விட்டு வருகிறார் என்று சொன்னால், ஆர்.என்.ரவியின் நாக்கை அறுக்கும் நிலைமை வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், உன் நாக்கை அறுத்து விடுவோம் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தொழிற்சங்கத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்த நினைத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் எங்கேயாவது போனால் நாக்கை அறுக்கக் கூடிய போராட்டத்தை நடத்துவோம் என்று பரபரப்பாக பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.