Categories: தமிழகம்

சுவரில் விளம்பரம் எழுதுவதில் தகராறு…பாஜகவினர் சட்டையை பிடித்து தாக்கிய திமுகவினர்?: போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவிப்பு..!!

கரூர்: கரூரில் அதிகரிக்கும் குட்கா, கஞ்சா ஆகியவைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதையும், அதை தடுக்காத காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தினையும் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் சர்ச் கார்னர் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுவற்றில் சுவர் விளம்பரம் எழுதுவது சம்பந்தமாக பாஜக, திமுக வினரிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், திமுக வினர் எப்போதும் போல, தாக்குதலில் ஈடுபட்டதால் பாஜக நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், திமுக வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் செல்வன் தலைமையில், அதே பகுதியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட சாலைமறியல் நடைபெற்றது.

இந்நிலையில் கலவரபூமியாக காணப்பட்ட இடத்திற்கு நேரில் வந்த பாஜக கரூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கரூர் மாவட்டத்தில், 1 நெம்பர் லாட்டரி விற்பனை, கஞ்சா, குட்கா ஆகியவை விற்பனை தலை விரித்தாடுவதோடு, 24 மணி நேரமும் மதுக்கள் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றது என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டதோடு எங்கள் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க செல்வதாக கூறி ஆர்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை கரூர் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றார்.

இந்நிலையில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் நாதன், திமுக நகர செயலாளர் கனகராஜ் மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எங்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளை தாக்கியுள்ளனர் என்றும், ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கண்முன்னரே ரெளடியிசம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், எங்கள் சாலைமறியல் மற்றும் ஆர்பாட்டத்தினை கட்டுப்படுத்தி அனுப்பும் வேலையை மட்டுமே காவல்துறையினர் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலேயோ அல்லது அவரின் உத்தரவு பெற்றோ கரூரில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்

UpdateNews360 Rajesh

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

2 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

2 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

4 hours ago

This website uses cookies.