Categories: தமிழகம்

‘அவன் வேஷ்டியை அவுத்துவிடு’.. சுவர் விளம்பரத்தால் திமுக பாஜக இடையே மோதல் : போலீசார் கண்முன்னே பாஜகவினர் மீது தாக்குதல்!!

கரூர் : சுவர் விளம்பரத்தில் பாஜக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டநிலையில காவல்துறை முன்னிலையில் திமுகவினர் பாஜகவினரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த தினம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில், ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றனர்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சுவற்றில், பாஜகவினர் விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பாதி மட்டும் எழுதியிருந்த நிலையில், கரூர் நகர திமுகவினர், அதை அழித்து விட்டு தமிழக அரசின் சாதனைகளை விளம்பரம் எழுதியுள்ளனர்.

ஏற்கனவே எழுதப்பட்டிருந்த பாஜக விளம்பரத்தினை ஏன் அழித்தீர்கள் என்று கேள்வி கேட்ட பாஜக கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் ஐடி விங் மாவட்ட தலைவர் அருண் என்பவர்கள் அடங்கிய பாஜகவினரை சட்டையை பிடித்து திமுக வினர் தாக்கியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், கரூர் மத்திய நகர திமுக நிர்வாகியும், கரூர் மாநகராட்சி திமுக உறுப்பினருமான எஸ்பி கனகராஜ் தலைமையில் அரங்கேறிய இந்த சம்பவத்தினையடுத்து கரூர் நகர காவல்துறை டி.எஸ்.பி தேவராஜ் முன்னிலையிலேயே திமுகவினர் தாக்குதல் நடத்தியது அரசின் கவனத்திற்கு செல்லுமா ? என்பது நடுநிலையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கை ஆகும்.

கரூர் நகர காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்ட நிலையில், கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ் கண் முன்னரே, பாஜக நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் தாக்கிய சம்பவமும், மேலும், பாஜக பாஜக நிர்வாகிகளை வேஷ்டியை அவிழ்த்து விடுங்கள் என்று திமுக நிர்வாகிகள் கூச்சலிட்ட சம்பவமும், பாஜக  நிர்வாகிகளை, மிகவும் தரம் தாழ்ந்து, மிகவும் கேவலமாக திட்டியுள்ளனர்.

மேலும் திமுக நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகளை தாக்கிவிட்டு மேலும் தாக்க முயற்சித்த வீடியோ மட்டுமில்லாமல் அவர்கள், பாஜக நிர்வாகிகளை கொச்சையாக திட்டிய காட்சிகள், மீண்டும் திமுக ஆட்சியில் ரெளடியிசம்  தொடங்கியுள்ளதா ? என்ற கேள்விக்கனைகளும் எழுந்துள்ளதோடு, திமுகவினரின் இந்த செயல் மிகவும் அநாகரீகமாக இருப்பதோடு, ஆளுகின்ற திமுக ஆட்சியில் திமுக வினரே இது போல நடந்து கொள்வது மிகவும் கண்டனத்திற்குரியது என்று கூறி, பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் செல்வன் தலைமையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதோடு, அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர்.

அரசு சுவற்றில் விளம்பரம் எழுதுவது தவறு என்ற போதிலும், கடந்த 10 மாதங்களாக, எதிரே தான் பயணியர் மாளிகை உள்ளது என்றும், அமைச்சர் செந்தில்பாலாஜி வந்து செல்லும் இடம் என்பதால், திமுகவினர் ஒரு இடம் விடாமல் ஆங்காங்கே விளம்பரப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் பாஜகவினர் சிறிய இடத்தில் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, எழுதப்பட்ட சிறு விளம்பரத்தையும் திமுகவினர் ஆக்கிரமித்து, ஏற்கனவே எழுதப்பட்ட பாஜக விளம்பரத்தையும் அழித்துவிட்டு திமுகவினர் விளம்பரம் எழுதிய சம்பவமும், இன்று காலை சென்னையில் பாஜக நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, கரூரில் பாஜகவினரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், திமுக வினரின் இந்த செயலால் பாஜக நிர்வாகிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக நிர்வாகி ஒருவரது செல்போனையும் எடுத்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

7 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

9 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.