திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது. இந்த மோதலால் இன்று பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவனின் கைவிரல் துண்டானது.
இதைப்பார்த்த வரலாற்று ஆசிரியர் சிவக்குமார் வந்து மோதலை விலக்கி விட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரை ஆய்வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆசிரியரையும், மாணவனையும் அரசு மருத்துவமனையில் திருவிடை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.