திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் பைக் நிறுத்துவதில் இரு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்பு இரு மாணவர்களும் அங்கு சமாதானம் ஆனதாகவும் கூறிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அய்யலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த அய்யலூர் பேருந்து நிறுத்தம் வரை மாணவர்களுக்கிடையே தகராறு நடைபெற்று கொண்டே வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவர்களுக்கிடையே நடந்த இந்த மோதல் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.