திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் பைக் நிறுத்துவதில் இரு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்பு இரு மாணவர்களும் அங்கு சமாதானம் ஆனதாகவும் கூறிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அய்யலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த அய்யலூர் பேருந்து நிறுத்தம் வரை மாணவர்களுக்கிடையே தகராறு நடைபெற்று கொண்டே வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவர்களுக்கிடையே நடந்த இந்த மோதல் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.