Categories: தமிழகம்

தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து கல்வீசித் தாக்குதல் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் பைக் நிறுத்துவதில் இரு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்பு இரு மாணவர்களும் அங்கு சமாதானம் ஆனதாகவும் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அய்யலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.

இந்த அய்யலூர் பேருந்து நிறுத்தம் வரை மாணவர்களுக்கிடையே தகராறு நடைபெற்று கொண்டே வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவர்களுக்கிடையே நடந்த இந்த மோதல் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.