தமிழகம்

தூய்மை பணியாளர்கள் பரபரப்பு புகார்.. அமைச்சர் கேஎன் நேரு மறுப்பு!

தமிழகத்தில் ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை இன்று தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உறையூர் பகுதியில் உள்ள அமுதா கூட்டுறவு சங்கத்தில் நேரடியாக வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வேன்களை கொடியசைத்து இத்திட்டத்தை துவக்கி வைத்து பயனாளிகள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு
ஒரு நேரத்தில் மணிக்கணக்கில் மக்கள் மணி கணக்கில் கடைகளை காத்திருந்தனர். பின்னர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் இதனை சரி செய்யப்பட்டது.

தற்போது வயதானவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக முதல்வர் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் 1128 வண்டிகளில் 88 ஆயிரத்து 310 பயனாளிகளுக்கு இன்றைக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இன்றைக்குள் 80 சதவீத பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுவிடும்.

தூய்மை பணியாளர்கள் முதல்வர் போகவில்லை எனக்கூறி போராட்டம் தொடர்ந்து வருவதாக என்ற கேள்விக்கு? நாங்கள் நான்கு நாட்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சுமுகமாக தீர்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.

நிரந்தர பணிக்கெல்லாம் முதலமைச்சர் முடிவு செய்ய வேண்டும். நேற்று அதிமுக அமைச்சர் சொல்லி இருக்கிறார் 17,000 பேரை நாங்கள் நிரந்தர படுத்திருக்கிறோம் என சொல்லி இருக்கிறார். ஆனால், துப்புரப் பணிக்காக போடப்பட்டு ஆனால் அவர்கள் துப்புர பணிக்காக பயன்படுத்துவதில்லை.

நாடு முழுவதும் துப்புற பணியில் பிரச்சனை உள்ளது. அவர்கள் சொல்வது போல் ஒரே நாளில் செய்கிற காரியம் அல்ல. தொடர்ந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், தேவையானதை முதல்வர் செய்ய சொல்லியிருக்கிறார்.

தெரு நாய் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்றுள்ளது என்ற கேள்விக்கு? அருமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. விலங்கிய ஆர்வலர்கள் தலையிட்டால் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர். அதற்கு தடுப்பூசி போட்டு அறுவை சிகிச்சை செய்து பாதுகாக்க வேண்டும், அதற்கான உத்தரவு வந்தவுடன் மாநகராட்சி மதுரை செயல்படுத்தப்படும்.

தேர்தல் வாக்குறுதிகள் நிதி நிலை பொறுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஒரே நாளில் செயல்படுத்த முடியாது. தலைவர் சொன்னதை விட சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

எதிர்க்கட்சியினர் தேர்தல் வருவதால் குறை சொல்கின்றனர். மக்களுடன் ஸ்டாலின் பெரும் வரவேற்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,
மருத்துவ முகாம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது, தற்போது ரேஷன் பொருட்கள் கொண்டு செல்ல திட்டம் நடைபெற்று வருகிறது.

இன்னும் 8 மாதம் தேர்தலுக்கு இருக்கிறது. ஓரிரு நாட்களில் தூய்மை பணியாளர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என தெரிவித்தார்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.