Categories: தமிழகம்

கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!!

கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!!

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.

இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில் இங்குள்ள விலங்குகள் பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கோவையின் அடையளமாக விளங்கிய வ.உ.சி உயிரியல் பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மேயரை வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள், கோவை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க கடந்த 2 வருடத்திற்கு முன் திமுக அரசு அறிவித்திருந்தது.

சிறைச்சாலைககு சொந்தமான இடத்தில் இப்பூங்காவை அமைக்க அவசர கூட்டம் போட்டு அவசரத் தீர்மானம் இன்று நடைபெற்றது. கட்டிடமே கட்டக்கூடாது என கோர்ட் உத்தரவு உள்ள போதும், பூங்கா என சொல்லிவிட்டு தற்போது கூட்டரங்கு கட்டுவது எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வ.உ.சி பூங்கா, மாநகராட்சி கலையரங்கம் என ஏராளமான மாநரகாட்சிக்கு சொந்தமான இடம் இருக்கும் போது கூட்டரங்கு கட்டுவதற்காக 200 கோடி ரூபாய் போட்டு கட்ட வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர்.

1963ல் சென்னைக்கு பிறகு கோவையில்தான் வஉசி உயிரியல் பூங்கா இருந்தது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை கோவை மாநகராட்சி எடுக்கவில்லை, மக்கள் மீது அக்கறையில்லாத ஒரு மேயர், கோவை வளர்ச்சி மீது அக்கறை இல்லை என மேயர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.