தமிழகம்

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!!

மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசு இவ்வாறு கூறினார்.

மேலும், என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அது உயிரிழப்புக்கு ஈடாகாது, மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல்துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலர் ஈடுபடுகின்றனர் என்று கூறிய திருநாவுக்கரசர், தமிழக அரசு தனிப்படையை கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

அரசை பொருத்தவரை இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள், குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள் என்றவர், எவ்வளவுதான் நிவாரணம் கொடுத்தாலும் தாய்க்கு தன் மகனின்இழப்பு தாங்க முடியாத பேரிழப்பாகும் என்று கூறினார்.

காவல்துறையில் மேலதிகாரிகள் இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை மாறாக, கீழ் மட்டத்தில் உள்ள காவலர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தவர்,விசாரணையின் போது மனிதாபிமானமாக நடந்து கொள்வதற்கான பயிற்சியை காவலர்களுக்கு வழங்க வேண்டும்.

கொலைக்காக கொடுக்கப்படும் நஷ்ட ஈடு பரிகாரமாகாது என்றும் கூறினார். கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்து வருவதாக கூறியவர், அதற்காக அரசை குற்றம் சொல்ல தேவையில்லை என்றும், அடியாள் வேலை பார்ப்பதற்காகத்தான் போலீசார் பணிபுரிகிறார்களா? அதற்காகத்தான் சம்பளம் பெறுகிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அஜித் குமார் கொலை சம்பவத்தில் தேவையான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆனால்,இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.

ஒரு உயிரிழப்பிற்கு 200 கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்றவர், நிகிதா பொய்யாக புகார் கொடுத்திருந்தால் அவர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை கேட்டுக்கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

14 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

15 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

15 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

16 hours ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

17 hours ago

திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!!

விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண…

18 hours ago

This website uses cookies.