தமிழக முதல்வர் விருத்தாச்சலம் வருகை தந்த போது, நெடுஞ்சாலையில், மின்விளக்குகள் எரியாமல், இருப்பதற்கு நாங்கள் காரணம் இல்லை என மின்துறை அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ மற்றும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால், ஏற்பட்டுள்ள பயிர் சேதம், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆய்வுக்குப் பின்பு, சென்னை செல்வதற்காக விருத்தாச்சலம் வழியாக வருகை தந்தார். இதனால் விருத்தாச்சலம் வழியாக முதல்வர் ஸ்டாலின் வருவதை அறிந்த திமுக தொண்டர்கள், மதியம் 5 மணியிலிருந்து பொன்னேரி புறவழிச் சாலையில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால், விருத்தாச்சலம் நகரத்துக்குள் வருகின்ற நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதைக் கண்ட திமுக தொண்டர்கள், மின்வாரிய துறை அதிகாரியிடம், முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அலறடித்துக் கொண்டு வந்த மின்வாரியத் துறை அதிகாரிகள், பொன்னேரி, பூதாம்பூர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில், மின் விளக்குகளுக்கு செல்லக்கூடிய மின்சாரம் சரியாக உள்ளதா என? ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வு மேற்கொண்டதில் மின்வாரியதுறை அதிகாரிகள், மீது எந்தவித தவறும் இல்லை என்றும், மின்சாரம் வழங்குவது மட்டும் தான், மின்வாரியதுறை அதிகாரிகளின் கடமை என்றும், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதற்கு, ஒப்பந்ததாரர்கள் தான் காரணம் என ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் வருகின்ற போதே, நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால், சாமானிய பொதுமக்களின் பிரச்சினை எப்படி தீர்ப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக முதல்வர் வருகின்ற போது, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, மின் விளக்குகள் எரியாமல், இருந்ததற்கு, ‘நாங்கள் பொறுப்பில்லை’ என மின்வாரிய துறை அதிகாரிகள் பதிவிட்ட வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்படுத்தியது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.