Categories: தமிழகம்

தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி வழங்கவில்லை : மீண்டும் மத்திய அரசு மீது குறை கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி!!

கோவை : தமிழக மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது, ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறும் போது : முதல்வர் ஆணைக்கு இணங்க, பொதுமக்கள் தாகம் தீர்க்க பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மோர் பந்தல்களில் இளநீர், தர்பூசணி ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. கோவையை பொருத்தவரை முதல்வர் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக நிதிகளை வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டம் ஏதும் கொண்டுவரப்படவில்லை, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்து பணிகளை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நமது மின் தேவை 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது.

முதல்வர் வழிகாட்டுதல் படி, 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு மின் தேவைக்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தையும் வாங்கி வருகின்றோம். அடுத்த ஆண்டு அனைத்து மின்சார தேவைகளும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வருகிறோம்.

மேம்பாலப் பணிகள் குறித்த கேள்விக்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை அழைத்து பேசி தீர்வு காணப்பட்டு மேம்பால பணிகள் தொடரும் எனவும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு பின்னர் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் மேலும் குடிநீரைப் பொருத்தவரை கிடப்பில் போடப்பட்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து குடிநீர் சரிசெய்யப்படும் இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.