Categories: தமிழகம்

தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி வழங்கவில்லை : மீண்டும் மத்திய அரசு மீது குறை கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி!!

கோவை : தமிழக மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது, ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறும் போது : முதல்வர் ஆணைக்கு இணங்க, பொதுமக்கள் தாகம் தீர்க்க பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மோர் பந்தல்களில் இளநீர், தர்பூசணி ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. கோவையை பொருத்தவரை முதல்வர் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக நிதிகளை வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டம் ஏதும் கொண்டுவரப்படவில்லை, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்து பணிகளை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நமது மின் தேவை 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது.

முதல்வர் வழிகாட்டுதல் படி, 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு மின் தேவைக்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தையும் வாங்கி வருகின்றோம். அடுத்த ஆண்டு அனைத்து மின்சார தேவைகளும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வருகிறோம்.

மேம்பாலப் பணிகள் குறித்த கேள்விக்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை அழைத்து பேசி தீர்வு காணப்பட்டு மேம்பால பணிகள் தொடரும் எனவும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு பின்னர் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் மேலும் குடிநீரைப் பொருத்தவரை கிடப்பில் போடப்பட்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து குடிநீர் சரிசெய்யப்படும் இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…

29 minutes ago

ஒரு பிச்சைக்காரனால அரசாங்கமே ரிஸ்க்ல இருக்கு- தனுஷின் “குபேரா” படத்தின் கதை இதுதானா?

வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…

1 hour ago

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

This website uses cookies.