தமிழகம்

கடனைத் திருப்பிக் கேட்டவருக்கு புதுவித டீல்.. வீட்டுக்குள் சென்றதும் ஷாக்.. கோவையில் நடந்தது என்ன?

கோவையில் கடனைத் திருப்பிக் கேட்டவருக்கு பெண்களை வைத்து ஆசையைத் தூண்டிய நபர் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவர் நெல்லையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், கோவை மாவட்டம், பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் ரோட்டைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கு தொழில் நிமித்தமாக லட்சுமணன் கடன் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில், கொடுத்த பணத்தை லட்சுமணன் திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு, கோவைக்கு நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சூர்யா கூறிஉள்ளார். எனவே, கொடுத்த கடனை வாங்குவதற்காக, லட்சுமணன் நெல்லையில் இருந்து கோவைக்கு வந்து உள்ளார். பின்னர், ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகே வந்துவிட்டு, சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.

இதன்படி அங்கு வந்த சூர்யா லட்சுமணனை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த வீட்டில் இரண்டு பெண்கள் இருந்து உள்ளனர். பின்னர், அந்தப் பெண்களைக் காட்டி லட்சுமணனுக்கு சபல ஆசையைத் தூண்டி உள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட லட்சுமணன், அங்கு இருந்து உடனடியாக தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே அழுகிய நிலையில் சடலம்.. சொகுசு காரில் நடந்தது என்ன?

பின்னர் உடனடியாக இது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், போலீஸ் வருவதை முன்கூட்டியே அறிந்த சூர்யா மற்றும் அவரது பங்குதாரர் ஜெபின் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த 2 பெண்களையும் மீட்ட போலீசார், தப்பி ஓடிய சூர்யா மற்றும் ஜெபின் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

17 minutes ago

17 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசம்… போக்சோவில் 32 வயது பெண் கைது!

17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…

26 minutes ago

எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

54 minutes ago

நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!

ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…

2 hours ago

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…

3 hours ago

இனியும் இபிஎஸ் பற்றி இழிவு செய்தால்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…

3 hours ago

This website uses cookies.