கோவையில் கடனைத் திருப்பிக் கேட்டவருக்கு பெண்களை வைத்து ஆசையைத் தூண்டிய நபர் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவர் நெல்லையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், கோவை மாவட்டம், பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் ரோட்டைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கு தொழில் நிமித்தமாக லட்சுமணன் கடன் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில், கொடுத்த பணத்தை லட்சுமணன் திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு, கோவைக்கு நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சூர்யா கூறிஉள்ளார். எனவே, கொடுத்த கடனை வாங்குவதற்காக, லட்சுமணன் நெல்லையில் இருந்து கோவைக்கு வந்து உள்ளார். பின்னர், ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகே வந்துவிட்டு, சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
இதன்படி அங்கு வந்த சூர்யா லட்சுமணனை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த வீட்டில் இரண்டு பெண்கள் இருந்து உள்ளனர். பின்னர், அந்தப் பெண்களைக் காட்டி லட்சுமணனுக்கு சபல ஆசையைத் தூண்டி உள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட லட்சுமணன், அங்கு இருந்து உடனடியாக தப்பி ஓடி உள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே அழுகிய நிலையில் சடலம்.. சொகுசு காரில் நடந்தது என்ன?
பின்னர் உடனடியாக இது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், போலீஸ் வருவதை முன்கூட்டியே அறிந்த சூர்யா மற்றும் அவரது பங்குதாரர் ஜெபின் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த 2 பெண்களையும் மீட்ட போலீசார், தப்பி ஓடிய சூர்யா மற்றும் ஜெபின் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.