கோவையில் மூன்று சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, ஒவ்வொரு வழக்கிலும் ஐந்தாண்டு சிறை மற்றும் கொலை மிரட்டலுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பு அளித்தது.
கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள குப்பனுார், சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (72). இவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்ற 11 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகளிடம், பாலியல் தொல்லை செய்தார். யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இது தொடர்பாக, 2019ல் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பெருமாள்சாமியை, ‘போக்சோ’ சட்டத்தில், கைது செய்து சிறையிலடைத்தனர். இவர் மீது கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பெருமாள்சாமிக்கு, மூன்று போக்சோ சட்டப்பிரிவில் தலா ஐந்தாண்டு சிறை, கொலை மிரட்டலுக்கு மூன்றாண்டு சிறை, மற்றும் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.