தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் விளைவாக கோவை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று தொடங்கிய முதல் விமான சேவையில் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் 163 பயணிகள் கோவைக்கு வந்தடைந்தனர்.
காலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்த விமானம், 7.30 மணிக்கு மீண்டும் கோவையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணம் செய்தனர்.இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை வாரத்திற்கு 3 நாட்கள் என்ற அடிப்படையில் விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், வளர்ந்து வரும் கோவை நகரில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கோவை கூடுதல் வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.