கோவை ; ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்.
சார்ஜாவில் இருந்து கோவை விமான விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த வாலிபரின் பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அந்த வாலிபரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது வாலிபர் வர மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தான் கையில் வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் கிழித்து வீசினார். இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பீளமேடு போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தை சேர்ந்த முகமது சாலிக் என்பது தெரியவந்தது. மேலும் இவர் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார் என்ற தகவல்கள் பாஸ்போர்ட்டில் இருப்பதால், அதனை பார்த்து அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் கிழித்த தாகவும் ஒப்புக் கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்த 18 பயணிகளை நேற்று கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.பேண்ட் பாக்கெட்டுகள், உடைகள், சாமான்கள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சுரேஷ்குமார் (வயது 37, சென்னை), சங்கர் (வயது 29, கடலூர்) ராம்பிரபு (வயது 35, பரமக்குடி), குமரவேல் (வயது 44, சேலம்) ஆகிய நான்கு பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.