கோவை : அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடையை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், வடக்கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகலூர் பயணியர் நிழற்குடை ஆனது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நிழற்குடையானது வடக்கலூர் கிராம அலுவலகத்திற்கு முன்பு உள்ளது.
ஊர் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், வடக்கலூர் ஊரை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் தங்களது குறைகளை சொல்வதற்கு வடக்கலூர் ஊராட்சி அலுவலகத்திற்கு வருவதற்கும், மற்றும் இங்கு செயல்படும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களது வீட்டிற்கு செல்வதற்கும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், வெளியூருக்கு வேலைக்கு செல்லும் கிராம மக்களும் இந்த பயணியை நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்சமயம் பெய்து வரும் பருவமழை காரணமாக இந்த பயணிகள் நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை சுற்றி விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும், அதிகப்படியான பருவ மழையின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்கி சுகாதாரம் கேடு விளைவிக்கும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளது.
இந்த பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் இப்போது பயணியர் நிழற்குடையை பயன்படுத்தாமல் தார் சாலையின் ஓரமாக நின்றும், கால் வலியின் காரணமாக தார் சாலையின் மேல் உட்கார்ந்தும் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.