கோவை : கோவையில் ஆட்டோ டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும் அவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது டவுன்ஹால் பகுதியில் சுற்றித் பிரிந்த முகமது ரியாசை மடக்கி பிடித்தனர்.
குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.