கோவை: நேற்று பெய்த கன மழையில் 15000 வாழை மரங்கள் சேதமடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா பகுதிகளில் தானிய வகைகள், தென்னை, வாழை உள்ளிட்ட விளைபொருட்களின் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள பெட்டையாண்டிபுரம் சாந்தலிங்கம் என்பவரின் தனியார் தோட்டத்தில் 2000 வாழை மரங்கள் கனமழையால் சேதமடைந்துள்ளது. பாலக்காட்டு கணவாய் உள்ளதால் இப்பகுதிகளில் வருடத்தில் இருமழை பொழியும்.
எனவே, விவசாயிகள் விவசாயம் செய்ய தோட்டத்து பத்திரம், வீடு பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து சொட்டுநீர்பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
கல்குவாரிகள் அதிகம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று தீடீர் சூரை காற்றுடன் பெய்த கனமழையால் கிணத்துக்கடவு சுற்றுவட்டார விவசாய நிலங்களில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான 15,000 வாழைமரங்கள் கன மழையால் சேதம் அடைந்தது.
தற்போது, சட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.