கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ம் தேதி வரை ரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. பலியான ஜமேஷா முபீன் தற்செயலான விபத்தில் இறந்தாரா..? அல்லது சதி வேலைக்கு முயன்ற நிலையில் இறந்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைப்பற்றப்பட்டன. இதனால், சதி செயலுக்காக முயன்றாரா..? என்ற சந்தேகம் போலீஸாருக்கு சந்தேகம் வழுத்தன.
இதனிடையே, ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து மர்ம பொருட்களை அவரது கூட்டாளிகள் எடுத்துச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனடிப்படையில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜெ. எம்.2″ல் நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணக்குப் பிறகு 5 பேரை நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.