கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; போலீஸ் காவலில் கிஷோர் கே சுவாமி.. நீதிமன்ற தீர்ப்பையடுத்து விசாரணை தொடக்கம்!!

Author: Babu Lakshmanan
28 November 2022, 6:33 pm
Quick Share

கோவை கார்குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில், பதிவிட்ட கிஷோர் கே சாமியிடம் சைபர் கிரைம் போலீஸார் ஆறு மணி நேரம் விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சென்னையில் கைது செய்தனர். இதனையடுத்து கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.

kishore k swamy - updatenews360

இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் , கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்திலுள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர்.

kishore k swamy - updatenews360

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 321

0

0