கோவை ; கோவை பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவித்த பந்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என வழக்கறிஞரும் பாஜக மாநில துணை தலைவருமான பால்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக, கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழ்க்கில் எதிர் மனுதாரராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது, அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அது குறித்து வழக்கறிஞரும், பாஜக மாநில துணை தலைவருமான பால் கனகராஜ் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது ;- கோவை பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவித்த பந்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. பொதுநல வழங்கு நீதிமன்றத்தில் வந்தது. அதில் 5வது எதிர்மனுதரராக அண்ணாமலையின் பெயர் இருந்தது. ஆனால் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை பந்த் அழைப்பு விடுத்தார் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது தவறு.
பந்த் தொடர்பாக தமிழக பாஜக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பொதுமக்களை பந்த்க்கு அழைத்தார்கள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை பந்த் அறிவிக்கவில்லை. ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது. அந்த வகையில், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
பந்த் சார்பாக பாஜக தலைவருக்கு எந்த தகவலும் மாவட்டம் சார்பில் தரவில்லை. அதேவேளையில், நீதிமன்றத்தில் பந்த்துக்கு தடை கேட்டபோது நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, என தெரிவித்தார்
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.