கோவை குண்டுவெடிப்பு திருச்சி நபரிடம் செல்போன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் தேதி சிலிண்டர் கார் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 6 நபர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து அந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள வயர்லெஸ் ரோடு, ஸ்டார் நகரில் அப்துல் முத்தலிப் என்பவருடைய வீட்டில் திருச்சி கே.கே.நகர் சரக குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் சோதனையில் எந்தவிதமான ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர்.
ஏற்கனவே அப்துல் லத்திபிடம் NiA அதிகாரிகள் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.