கோவை சங்கனூர் அருகே கான்கிரீட் வீடு சரிந்து இடிந்து விழும் வீடியோ வைரலான நிலையில், மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் முதல் காந்திபுரம் வரை, சங்கனூர் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் சங்கனூர் கால்வாயை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளில் உள்ளவர்களை காலி செய்ய மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு காலி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பணியின் போது வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் சுல்தானா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கால்வாயை ஒட்டியுள்ள வீடுகளில் இருப்பவர்களை காலி செய்ய வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஓடை அருகே இருந்த கான்கிரீட் வீடு இடிந்து விழந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
மேலும், இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், “சங்கனூர் ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைத்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஓடைக்கரையோரம் இருப்பவர்களுக்கு ஆக்கிரமிப்புகளைக் காலி செய்ய அறிவுறுத்திவிட்டோம்.
இதையும் படிங்க: பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஊழியர் கைது!
தற்போது 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சுவருடன் கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், சுரேஷ் என்பவரின் வீடு மட்டுமல்லாது, இடிந்த அதிர்வில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.