கோவை அரசு மருத்துவமனையில் நடந்து வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேஷன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி சார்பில் 100 வார்டுகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முகாம் முன்னதாக நடந்த நிலையில், இன்று இரண்டாவதாக இலவச மருத்துவ முகாம் நடைபெறுகின்றன.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை வந்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேஷன் அரசு மருத்துவமனையில் நடக்கும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூய்மை பணியாளரிடம் தங்களுடைய குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா, மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.