தாமதமாக வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநாகராட்சி அறிவிப்பை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாநகராட்சியில் அக்டோபர் 1ம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெறுவதை தொடர்ந்து, மாநகராட்சியின் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், சர்மிளா, பிரபாகரன் ஆகியோர் மேயருக்கு எதிரான பதாகையை கையில் ஏந்தி முழக்கம் எழுப்பியபடியே மாமன்றத்திற்குள் வந்தனர்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மேயர் கல்பனா அவர்களை வெளியேறுமாறு கூறினார். இதனையடுத்து வெளியேறிய கவுன்சிலர்கள் மூவரும் மாமன்ற வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “மேயர் கல்பனா ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 300 கோடி ரூபாய் அளவிற்கு கோவை மாநகராட்சியில் வரி வசூல் செய்துள்ள நிலையில், 100 வார்டுகளிலும் எந்த ஒரு புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும், மேயர் கல்பனா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அனஇத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள சூழலில் அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷின் வார்டில் தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்டவரின் புகைபுகைப்படத்தை அனுப்பியும் இதுவரை என்ன என்று கூட கேட்கவில்லை, என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மேயருக்கு எதிரான பதாகையை கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடியே மாமன்ற அரங்கிற்குள் சென்ற அதிமுக உறுப்பினர்கள் மேயர் இருக்கையின் அருகே சென்று வரி அபராதம் குறித்த தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.