தமிழகம்

பூக்கடையில் லாபம் தருவதாக ₹1 கோடி மோசடி… அலற விட்ட தம்பதி : ஷாக் ஆன கோவை!

அதிக லாபம் தருவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் பாண்டியன். இவர் பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரள அருகே உள்ள ஆனந்த நகரைச் சேர்ந்த அப்பாவு என்ற விஜயகுமார். அவருடைய மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் அடிக்கடி வந்து பூஜை பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.

இதனால் இரண்டு பேரும் தமிழ் பாண்டியனிடம் நன்றாக பழகினார்கள். தினமும் பூஜை பொருள்கள் வாங்கி செல்வதால் அவர்களிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்று அவர் கேட்டு உள்ளார்.

அதற்கு விஜயகுமார் தான் பல்வேறு பகுதிகளில் கடைகள் நடத்தி வருவதாகவும், தான் சாமியார் என்றும், தனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் தினமும் கடைகளை திறந்ததும் பூஜை செய்வேன் என்பதால் பூஜை பொருட்கள் அதிகம் வாங்கி செல்வதாக கூறினார்.

இதன் காரணமாக தமிழ் பாண்டியன் அந்த தம்பதியினரிடம் சகஜமாக பழகினார். கடந்த 2021 ஆம் ஆண்டு கடைக்கு வந்த தம்பதியினர், தங்களுக்கு 10 க்கு மேற்பட்ட கடைகள் இருப்பதால் அதன் மூலம் தினமும் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே நீங்கள் அதில் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்களோ. அந்த பணத்துக்கு ஏற்ப லாபம் கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

அதன்படி அவர் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து உள்ளார். அப்பொழுது தம்பதியினர் வங்கியில் கொடுக்கும் லாபத்தை விட கூடுதலாக கொடுக்கிறோம் என்றும் கூறி உள்ளனர். அதன்படி அவர் முதலீடு செய்த பணத்துக்கு லாபமும் கொடுத்து உள்ளனர்.

பின்னர் அந்த தம்பதியினர் தமிழ் பாண்டியனிடம் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது இருந்தால் முதலீடு செய்ய சொல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.

தனது நண்பர்களான ரஞ்சித், சோமசுந்தரம், சுரேஷ், பொன்னழகு, கண்ணன், பாலசுப்பிரமணியம், மருதபாண்டி, சிவா உட்பட 10 பேரிடம் கூறினார். உடனே அவர்களும் அந்த தம்பதியிடம் முதலீடு செய்தனர். அவர்களுக்கும் அந்த தம்பதியினர் ஓரிரு மாதங்கள் மட்டும் லாபத் தொகை கொடுத்ததாக தெரிகிறது.

பின்னர் கொடுக்கவில்லை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டும், நேரில் சென்று கேட்ட போதும் விரைவில் கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் லாபத் தொகையை கொடுக்கவில்லை.

இதையும் படியுங்க: அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? புரிய வைப்போம் : த.வெ.க தலைவர் விஜய் கடிதம்!

பின்னர் தமிழ்பாண்டியன் மற்றும் பணம் கொடுத்த அனைவருக்கும் விஜயகுமார், பிரியதர்ஷினி தம்பதியினரை நேரில் சந்தித்து எங்களுக்கு லாபத் தொகை கொடுக்க வேண்டாம் நாங்கள் கொடுத்த ரூபாய் ஒரு கோடியே 2 லட்சத்தை திரும்பிக் கொடுங்கள் என்று கூறி உள்ளனர். அதற்கு தம்பதியினர் விரைவில் தந்து விடுவதாக கூறினர்.

ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை அப்பொழுது தான் அவர்கள் தங்கள் மோசடி செய்யப்பட்டது அறிந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் விஜயகுமார், பிரியதர்ஷினி தம்பதியினர் தமிழ் பாண்டியன் உள்பட பதினோரு பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.