கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
கோவை கணபதி, வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். நேற்று மாலை மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது, காவல்துறையினர் மோசடி செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டதாரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதகள் நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினரால் தற்போது வரையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.