கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
கோவை கணபதி, வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். நேற்று மாலை மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது, காவல்துறையினர் மோசடி செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தும் போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டதாரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதகள் நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினரால் தற்போது வரையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.