கோவை : சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோவையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி காணவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கற்பகம் விசாரணை நடத்தி வந்தார். அதில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை செல்வபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 27) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கணேசனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் சிறுமியை கடத்திய வழக்கில் கணேசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு அளித்தார். அத்துடன் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.