கோவை மாவட்டம் சூலூரில் எரிவாயு மயானத்தில் இறந்தவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரிகளின் மந்திர பூஜைக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுமார் 40 வயது உடைய ஆண் பிணம் ஒன்று எரிவாயு மயானத்தில் அடக்கம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பெயரில் இரவு 7 மணி அளவில் சடலம் சூலூர் எரிவாயு மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. சடலத்துடன் இறந்தவரின் உறவினர்களுடன் 8 அகோரிகள் எனப்படும் சாமியார்கள் உடன் வந்து உள்ளனர்.
அவர்கள் சடலத்தை வேனில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லும் போது பிரம்மாண்டமான உடுக்கை வாத்தியங்களுடன் மந்திரங்கள் ஓதியபடி எடுத்துச் சென்றனர். மேலும், இறந்தவரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்னதாக வந்து இருந்த அகோரிகளில் ஒருவர் இறந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து சுமார் ஐந்து நிமிடம் மந்திரங்களை ஓதினார்.
பின்னர் அகோரியின் உடம்பில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து இறந்தவரின் வாயில் வைத்து மந்திரம் ஓதினார். அதன் பின்னர் இறந்தவரின் உடல் எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ சூலூர் பகுதியில் வைரலானது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.