கோவை : கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே யானையை விரட்ட முயன்ற போது மகேஷ் குமார்(36) என்பவரை எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் யானை அவரது உடலின் அருகிலேயே சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர், தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் மகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை வரும் பொழுது உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தால் யானையை விரட்டும் பணியை வனத்துறையினர் பாதுகாப்பாக மேற்கொள்வார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆனைக்கட்டி துவைப்பதி மலை கிராமத்தில் அதிகாலையில் சிறுநீர் கழிக்க சென்ற மருதாச்சலம் என்ற நபரை மற்றொரு காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஒரே நாளில் வெவ்வேறு பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.