சென்னையில் இருந்து கோவை வந்த சதாப்தி ரயிலில் மழை வெள்ளம் மேற்கூரையில் இருந்து அதிக அளவில் கசிந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் உள்ள 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, பெய்த கனமழையில் ரயிலின் மேற்கூரை வழியாக ஏசி பெட்டிக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், அங்கிருந்த பயணிகள் தூங்க முடியாமல் உட்கார்ந்தே பயணித்தனர்.
மேலும் படிக்க: நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… திடீரென என்ட்ரி கொடுத்த கணவன் ; கொலையில் முடிந்த கள்ளக்காதல்!!!
இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், மதியம் 2:30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைய வேண்டிய இந்த ரயில் மாலை 4:15 மணிக்கு கோவை வந்தடைந்தது.
இரண்டு முப்பது மணிக்கு ரயில் வந்தடையும் என தனியார் வாகன ஓட்டிகளும், ரயில் பயணிகளின் உறவினர்களும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். வயதான பயணிகள் சரியான நேரத்திற்கு மதிய உணவு எடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.