கோவை அரசு கலை கல்லூரியின் ஆண்டு விழாவில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிய தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை அரசுக் கலை கல்லூரியில் நடத்தப்படும் ஆண்டு விழாவையொட்டி, மாணவர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆசிரியர் ஒருவர், உடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கூடிய சுற்றறிக்கையை அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
அந்த சுற்றறிக்கையில், கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக கல்லூரி சார்பில் கட்டுப்பாட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவுக்கு வரும் மாணவர்கள் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வரலாம் என்றும், மாணவர்கள் உணவுகள் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடாத போதும், ஆசிரியர் ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறி, ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
எனவே, ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நாளை போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.