கோவையில் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.
கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது மழைபெய்து வந்துகொண்டு இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கோவை நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருவதால் தற்பொழுது நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னம்மநல்லூர் பகுதியில் உள்ள நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். மேலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் உடனிருந்தனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.