கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பால வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கனமழையும் பொதுமக்களை பெரிதும் வாட்டி வதைத்து வருகிறது. சாலைகள் சேறும், சகதியும் காணப்படுவதுடன், சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கின்றன.
குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே, உப்பிலி பாளையம் மேம்பாலம் உள்பட கோவை மாநகரின் முக்கிய மேம்பாலங்கள் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கோவை தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்வதிலும் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்ததால் பொதுமக்களுக்கு அவ்வளாக பாதிப்பு இல்லாமல் இருந்தாலும், இன்று மாலை நேரத்தில் பெய்த கனமழையால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதித்தனர்.
அவினாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேலும் இரும்பு பேரிகார்டுகள் போடப்பட்டது. இதனால் சுரங்கு பாதையில் செல்லும் வாகனங்களும் மேம்பாலத்திற்கு திருப்பி விடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவினாசி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றது.
இதே போல், லங்கா கார்னர் சுரங்க பாதையில் தண்ணீர் சூழ்ந்ததால் திருச்சி சாலைக்குச் செல்லும் வாகனங்களும் செல்லாததால் பள்ளி முடிந்து பேருந்து காத்திருந்த மாணவ, மாணவிகள் தண்ணீரிலேயே அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்றனர்.
வாகன ஓட்டிகள் தங்களின் மோட்டார் வாகனங்களை இயக்க முடியாமல், ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றனர்.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறுவதில்லை என்பதைப் போல, கோவை மாநகரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும், இந்த மழைநீர் வடிகால் பிரச்சனையில், ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மழை பெய்த பிறகு மோட்டார்களை வைத்து அதனை அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு, எத்தனை பெரிய மழை பெய்தாலும், பாலங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையிலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.